இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் இனி தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று அந்நாட்டு மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளது. தாலிபான்களின் முந்தைய ஆட்சியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மகளிருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் தாலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றியதுமே வீராங்கனைகள் பலரும் நாட்டைவிட்டு வெளியேற தொடங்கிவிட்டனர். இந்நிலையில் காபூலில் இருந்து ஆப்கான் மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளர்கள், இளம் வீராங்கனைகள் என 81 பேர் ஒரு பேருந்து மூலம் தூர்கான் எல்லை வழியாக லாகூரில் தஞ்சமடைந்தனர்.