சியோல்: வடகொரிய நாட்டில் 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா புதன்கிழமையன்று கிழக்கு கடற்பகுதியில் நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது. சோதனையில் 800 கி.மீ. தூரத்தில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. ஒரே வாரத்தில் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆய்வு செய்து வருகின்றன. வடகொரியா வார இறுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட குரூஸ் ஏவுகணையை பரிசோதித்ததாக கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த தகவலை தென் கொரியா வெளியிட்டு உள்ளது.