சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,608 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,608 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கடந்த மாத தொடக்கத்தில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை அடுத்தடுத்த வாரங்களில் மீண்டும் ஏற்றத்தைக் கண்டது. அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 35,464-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.144 உயர்ந்து ரூ.35,608-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,451க்கும், சவரன் ரூ.35,608க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி இன்று கிராமிற்கு ரூ. 68.50 விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4451 விற்பனை செய்யப்படுகின்றது.

Related Stories: