லாகூர்: பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ரகிம் யார் கோன் மாவட்டத்தில் பழமை வாய்ந்த இந்து கோயில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கும்பல் திடீரென இந்த கோயில் மீது தாக்குதல் நடத்தியது. இதில், கோயில் மற்றும் சிலைகள் சேதமடைந்தது. இதன் காரணமாக, அந்த பகுதியில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கலவரத்தை துணை ராணுவம் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது.. கடந்த வாரம் 8 வயது சிறுவன் ஒருவன், இஸ்லாமிய பள்ளி வாசலுக்கு சொந்தமான நூலகத்தின் மீது சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. இதன் எதிரொலியாக தான் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.