திருவள்ளூர்: பெண் பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவரும் வட்டார இயக்க மேலாளரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலக முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் மோகனா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரமா, மாவட்ட பொருளாளர் பத்மா உள்ளிட்ட திரளான பெண்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 90 சதவீத பெண் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எல்லாபுரம் வட்டார இயக்க மேலாளர் பெண் பணியாளர்களிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை திட்ட இயக்குனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. எனவே அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.