ஏரியில் மூழ்கி டிரைவர் பரிதாப பலி

ஸ்ரீபெரும்புதூர்:  காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் காலனியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (45). டிரைவர். இவரது மனைவி கமலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் ஹரிதாஸ், வையாவூர் கிராமத்தில் உள்ள சித்தேரியில் மீன் பிடிக்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இந்நிலையில், நேற்று மதியம் வையாவூர் ஏரியில் ஹரிதாஸ், சடலமாக மிதந்தார். தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: