வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டப்படி குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணி புரிபவர்களின் பிள்ளைகள் உள்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள், இந்நாட்டின் குடியுரிமைக்காக காத்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் இந்தியர்கள். அமெரிக்க சட்டத்தின்படி, 21 வயது நிரம்பிய பிள்ளைகள் பெற்றோரை சார்ந்திருக்க முடியாது. ஆனால், ஆயிரக்கணக்கான இந்திய பிள்ளைகள் 21 வயதை கடந்த பின்பும் நிரந்தர குடியுரிமை இன்றி தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோர்கள் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் எச்1-பி விசாதாரர்கள் ஆவார்கள்.