சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பான பொது நல வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அறிக்கையில், தமிழகம் முழுதும் 30 யானைகள் கோயில்களில் முறையான இடத்தில் பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், 34 யானைகள், பாதிக்கு மேற்பட்ட யானைகளுக்கு பாகன் இல்லை என்றார்.