சென்னை: நீர்வளத்துறையில் 193 பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசின் நீர்வளத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்ய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார். அதன்பேரில், தற்போது, நீர்வளத்துறையில் 23 உதவி செயற்பொறியாளர், 170 உதவி பொறியாளர்கள் என மொத்தம் 193 பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.