பாணாவரம்: பாணாவரம் அருகே போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் அரசு வேலை பெற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமையாசிரியை மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், மாலையமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சத்தியபாமா. இவர் கடந்த 1997ம் ஆண்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இந்நிலையில், அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் மூலம், சத்யபாமாவின் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், சத்தியபாமா தன்னுடைய 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை போலியானதை சமர்ப்பித்து அரசு வேலை பெற்றது தெரியவந்தது.