×

திடீரென அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் 1,997 பேர் பாதிப்பு..! 1,943 பேர் குணம்: சுகாதாரத்துறை அறிக்கை

சென்னை: தமிழகத்தில் மேலும் 1,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.18கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.26 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,997பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,164பேர் ஆண்கள், 833பேர் பெண்கள்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 69ஆயிரத்து 398ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 20ஆயிரத்து 138ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 282 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 33பேர் உயிரிழந்துள்ளார். 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 28 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 230ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,943பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 15 ஆயிரத்து 030ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Corona ,Tamil Nadu ,Health Department , Corona rising sharply: 1,997 more people affected by corona in Tamil Nadu ..! Quality of 1,943 people: Health Department report
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...