தேனி: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. போக்குவரத்துத் துறை மற்றும் சித்த மருத்துவப் பிரிவின் சார்பில் நேற்று நேற்று தேனி அருகே குன்னூரில் நெடுஞ்சாலை பயணிகளிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.