திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது. அருகில் ரத்தக்கறை தோய்ந்த மரக்கட்டை கிடந்தது. இதனால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்து சடலத்தை எரித்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனத்தூர்-சேமங்கலம் செல்லும் சாலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருத்துறையூர் பகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலில் மர்மமான முறையில் சுமார் 30வயது மதிக்க தக்க பெண் சடலம் பாதியளவு எரிந்த நிலையில் கிடந்தது. காலில் மெட்டி இருந்தது. மர்மமான முறையில் பெண் இறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.