கொடைக்கானல்: கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வனத்துறை கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலைக்கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தை, காட்டெருமைகள், மான்கள், செந்நாய்கள், மலைபாம்புகள், சாம்பல்நிற அணில்கள், குரங்குகள், மயில்கள் என காட்டு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. அதில் மான், சிறுத்தை, யானை, பன்றி உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.