ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் - முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ. தூரத்திற்கு ₹3,200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது.
இதற்காக, ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்கள் பாதிக்கப்படுகிறது. பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன. இதில், ஊத்துக்கோட்டை வட்டத்தில் சென்னங்காரணை கிராமத்தில் தான் முதன் முதலில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு ஜூலை மாதம் 1ம் தேதியன்று 6 வழிச்சாலைக்காக அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது. இதற்கான, விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்தது.