சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை:மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று எழுதிய கடிதம்: தமிழகத்தில், 2009-10 ஆண்டுகளில் ஆசிரியர் நியமனங்களுக்கு பதிவு மூப்பு முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், தங்கள் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து வருகிறது. சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில், இவர்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: