சென்னை: தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கான மும்முரத்தில் தமிழக கட்சிகள் உள்ளன. இந்நிலையில், இத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜவும் அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாநில குழுவை தமிழக பாஜ நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.