காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சோழர் காலத்தை சார்ந்த 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுவர் அன்னையர் எனப்படும் சப்த மாதர்கள் சிற்ப தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் தலைமையில் நடந்த கள ஆய்வில் அணைக்கட்டு செல்லும் சாலையில் அனுமந்தண்டலம் கிராமத்தில் இந்த சிற்ப தொகுப்பை கண்டறிந்துள்ளனர். ஒரே பலகை கல்லில் ஒன்றரை அடி உயரமும், நான்கரை அடி நீளத்துடன் அழகிய வேலைப்பாடுகளுடன் சப்த மாதர் கன்னிகள் அமர்ந்த நிலையில், இரண்டு கரங்களுடன் அவரவர் ஆயுதங்கள், சின்னங்கள் மற்றும் அணிகலன்களுடன் வசீகரம் செய்கின்றன.