செஞ்சியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி-அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்

செஞ்சி :  செஞ்சியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி செஞ்சி பேரூராட்சி சார்பில் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி தாசில்தார் ராஜன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் செஞ்சி துணை போலீஸ் கண்காணிப்பாளர் இளங்கோவன், செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, சுப்பிரமணியன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் பார்கவி, மேற்பார்வையாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கார்த்திக், செயல் மணி, பத்மநாபன், தொண்டரணி சோடா பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: