சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலச்சரிவுகளால் உயர் நிலங்களில் வசித்து வரும் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். சில நாட்களாக இமாச்சலில் ஏற்பட்ட மேகவெடிப்பு எதிரொலியாக 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் மழை குறைந்திருக்கும் நிலையில் நிலச்சரிவுகள் தொடர்கதை ஆகி வருகின்றன. நேற்று மட்டும் 2 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தேசிய நெடுஞ்சாலை 707 - ல் ஏற்பட்ட நிலச்சரிவால் நஹான் - குமார்ஹட்டி சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.