×

மக்களை தேடி மருத்துவம் திட்டம் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கோவாக்சின் தடுப்பு மருந்து எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். தமிழகத்தில் சில மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று திடீர் உயர்ந்து வருகிறது. தொற்று பரவும் இடங்களில் மினி நோய் கட்டுப்பாடு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் நாளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மக்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிப்பதே இதன் நோக்கம் என கூறினார். தமிழகத்திற்கு இதுவரை 2.54 கோடி கொரோனா தடுப்பூசி வந்துள்ளது என கூறினார்.

இதுவரை 2.2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோவாக்சின் தட்டுப்பாடு உள்ளது. கோவாக்சின் தடுப்பு மருந்து எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. கடைகள் திறப்பதற்கு நேரக் கட்டுப்பழடு விதிக்கப்பட்டுள்ளது. கோயிகளுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார்.


Tags : Q. Stalin ,Radakrishnan , People, Search, Medical Project, Chief Minister, Radhakrishnan
× RELATED சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு