×

கலெக்டர் அலுவலகத்தில் 16 பேர் தீக்குளிக்க முயற்சி: நாகையில் பரபரப்பு

நாகை: நாகை சாமந்தான்பேட்டையை சேர்ந்த முத்து (38) தனது மனைவியை பிரிந்தார். இதனால், மனைவிக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். மேலும் அவரது அண்ணன்கள் மற்றும் உறவினர்கள் என 4 பேரின் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். இதனால், 4 குடும்பத்தை சேர்ந்த 16 பேர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தனர்.

Tags : Nagai , Attempt to set fire to 16 people in collector's office: Nagai commotion
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு