காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில். உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு தாய்ப்பால் வாரவிழா, துவக்க விழா மற்றும் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. விழாவை கலெக்டர் ஆர்த்தி குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இதில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை விளக்கி பேசும்போது, பிறந்த குழந்தைகளுக்கு 6 மாத காலம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்மார்கள் புரதச்சத்து மிகுந்த காய்கறிகள், பருப்பு வகைகள், முளை கட்டிய பயிர்கள், மூக்கடலை ஆகிய எளிதில் கிடைக்கும் உணவு வகைகளை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.