முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: திருவள்ளுர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு இரவு காவலர் பணிக்கு கலெக்டரால் நிர்ணயம் செய்யப்படும் தினக்கூலி அடிப்படையில் ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பெண் (ஆதரவற்ற விதவை) முன்னுரிமை அடிப்படையில் ஒரு நபர் நியமனம் செய்யப்படவுள்ளார். இதற்கு குறைந்தபட்சம் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் எழுத்துப்பூர்வமான சுயவிவர விண்ணப்பத்துடன் தங்களது கல்வி சான்று, சாதி சான்று நகலுடன் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 6/25 லால் பகதூர் சாஸ்திரி தெரு, பெரியகுப்பம், திருவள்ளுர் - 602 001, தொலைபேசி-044-29595311 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: