தமிழகம் உட்பட எந்த மாநிலங்களையும் பிரிக்கும் திட்டமில்லை: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: தமிழகம் உட்பட எந்த மாநிலங்களையும் இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள மாநிலங்கள் இரண்டாக பிரிப்பது குறித்து திட்டம் உள்ளதா என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் நித்தியானந்த ராய் அளித்துள்ள பதிலில், ‘‘புதிய மாநிலங்களை உருவாக்க பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து அவ்வப்போது கோரிக்கைள் பெறப்படுகின்றன. ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவது கூட்டாட்சி தத்துவதற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து பொருத்தமான காரணிகளையும் கருத்தில் கொண்டு புதிய மாநிலங்களை உருவாக்கும் விஷயத்தில் அரசு நகர்கிறது. தற்போது, அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை’’ என்றார்.

Related Stories: