புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் நீக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரக தேசிய அவசரநிலை மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே இந்நாடுகளை சேர்ந்த பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம் வழியாகவே இனி பிற நாடுகளுக்கு செல்ல முடியும். பயணிகள், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற பிசிஆர் சோதனை முடிவுகளை காண்பித்து, நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகம் விமான நிலையங்கள் வழியாக பயணிக்கலாம்.