×

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல்: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: பாதுகாப்புத்துறையில் முக்கிய கூட்டாளியாக இந்தியாவை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இதன் மூலமாக அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு சார்ந்த அதிநவீன, மேம்பட்ட மற்றும் திறன்வாய்ந்த தொழில்நுட்பங்களை இந்தியா வாங்க முடியும். இதன் அடிப்படையில் ஹர்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முன்வந்திருந்தது. ஹர்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் அது தொடர்பான உபகரணங்களை விற்பனை செய்வதற்கு ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு அனுமதி அளித்து, அதற்கு தேவையான சான்றிதழை வழங்கி இருக்கின்றது. இதற்கான மொத்த  மதிப்பீடு 8.2 கோடி அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.609 கோடியாகும். இந்த விற்பனையானது அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை மற்றும் அமெரிக்க இந்திய உறவை வலுப்படுத்த உதவுவதன் மூலமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை ஆதரவு அளிப்பதாகவும் அமையும். இந்தோ -பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் அரசியல் ஸ்திர தன்மை , அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கான ஒரு முக்கிய காரணியாக ஹர்பூர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை விற்பனை அமையும்.

Tags : US ,India , US approves sale of anti-ship missiles to India
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...