சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிருக்கான இரு சக்கர வாகன திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நூறு நாள் வேலை திட்டத்திற்கு ரூ.300 கொடுப்பதற்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார். மாநகராட்சிகளுக்கு அருகே உள்ள சில ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைய விருப்பம் தெரிவிப்பதாகவும், அதுகுறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.