போலீஸ்காரர்களால் தாக்கப்பட்ட பேருந்து நடத்துனருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு

சென்னை: குமுளியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்து, நெல்லை புதிய பேருந்து நிலையம் வந்தபோது, ஆயுதப்படை காவலர்கள் மகேஷ், தமிழரசன் ஆகியோர் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது, டிக்கெட் எடுக்கும்படி கூறிய நடத்துனர் ரமேஷை இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நடத்துனர் ரமேஷ் காயமடைந்தார்.  இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதுபற்றி நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயசந்திரன், பாதிக்கப்பட்ட நடத்துனர் ரமேசுக்கு ரூ.25 ஆயிரம்  இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். மேலும், இரு காவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட அவசியமில்லை என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: