பெரம்பூர்: நண்பனின் கொலைக்கு பழிவாங்க சிறுவன் உடல் முழுவதும் கத்தியால் கிழித்துவிட்டு தப்பிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஓட்டேரி பகுதியை சேர்ந்த மதன் என்பவர், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில், ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலையை சேர்ந்த 17 வயது சிறுவன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதனால், கொலையான மதனின் கூட்டாளிகள், இந்த சிறுவனை பழிவாங்க காத்திருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, கீழ்ப்பாக்கம் வரதம்மாள் தோட்டம் பகுதி அருகே இந்த சிறுவன் தனது நண்பருடன் கஞ்சா அடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.