சென்னை: தஞ்சை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (42). இவர், அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்திவந்தார். பாமக பிரமுகர். இவர், மதமாற்றத்தை தட்டிக்கேட்டது தொடர்பான பிரச்சனையில் கடந்த 2019 பிப். 5ம் தேதி மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமதுஅசாருதீன் (26), முகமது ரியாஸ் (27), நிஜாம் அலி (33), ஷர்புதீன் (60) உள்ளிட்ட 10பேரை திருவிடைமருதூர் போலீசார் கைதுசெய்தனர். பின்னர் இந்த வழக்கை தேசிய புலானாய்வு முகமை போலீசார் விசாரிக்கின்றனர். இதையடுத்து மேலும் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.