சென்னையில் வீடு, சுற்றுப்புறங்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் வீடு, சுற்றுப்புறங்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்; திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன்படி அதிகளவு திடக்கழிவு உருவாக்குபவர்கள் தங்கள் இடங்களில் உற்பத்தியாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை உரிய முறையில் பிரித்து கையாள வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக சுமார் 5000 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. திடக்கழிவு மேலாண்மை விதி 2016ன்படி நாளொன்றுக்கு 100 கிலோவிற்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் அல்லது 5000 ச.மீ. பரப்பளவு மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகத்தின் உரிமையாளர்களாகிய அதிகளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் வளாகத்திற்குள்ளேயே திடக்கழிவுகளை மக்க செய்யவும் மற்றும் மக்காத குப்பையை தரம்பிரித்து மக்கும் குப்பையினை உரமாக்கிடவும், மேலும் மக்காத குப்பையினை மறுசுழற்சியாளர்களிடம் ஒப்படைக்கவும் வேண்டும்.

மேலும், அதிக அளவில் திடக்கழிவு உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றம் இதர பிற நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் திடக்கழிவுகளை தாங்களே கையாள வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அதிகளவில் திடக்கழிவுகளை உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உட்பட பல்வேறு பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு திடக்கழிவுகளை கையாளுவது குறித்து சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களால் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, 1 முதல் 5 வரையுள்ள மண்டலங்களுக்கு வடக்கு வட்டார துணை ஆணையாளர் (பொ) திருமதி டி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், 6 முதல் 10 வரையுள்ள மண்டலங்களுக்கு மத்திய வட்டார துணை ஆணையாளர் திருமதி ஷரண்யா அரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், 11 முதல் 15 வரையுள்ள மண்டலங்களுக்கு தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலான், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும் அந்தந்த மண்டல அலுவலகங்களில் அதிக அளவில் திடக்கழிவு உற்பத்தியாகும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் 11.07.2021 மற்றும் 12.07.2021 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

நம் திடக்கழிவு நம் பொறுப்பு என்பதற்கிணங்க திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் இடங்களிலேயே திடக்கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக தரம்பிரித்து அவர்களது வளாகத்திற்குள்ளேயே மக்கும் குப்பையை கையாள்வதற்கும், மக்காத / உலர் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான சேவைகளை பெறுவதற்கு மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/department/solid-waste-management/#service என்ற இணையதள இணைப்பில் உள்ள சேவை வழங்குநர்களின் (Service Providers) தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,722 அதிகளவு திடக்கழிவு உருவாக்குபவர்கள் உள்ளனர்.

இவர்களில் 288 அதிகளவு திடக்கழிவு உருவாக்குபவர்கள் அவர்களின் வளாகத்திலேயே உரிய முறையில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து நிர்வகித்து வருகின்றனர். மாநகராட்சியின் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாத அதிகளவு திடக்கழிவு உருவாக்குபவர்கள் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019ன்படி, ஒரு விதிமீறலுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். எனவே,  அதிகளவு திடக்கழிவு உருவாக்குபவர்கள் தங்கள் இடங்களில் உற்பத்தியாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தங்களது வளாகத்திலேயே உரம் தயாரிக்கவும், இதரப் பணிகளுக்கு பயன்படுத்தி மறுசுழற்சி செய்து குப்பையில்லாமல் வெளியேற்றுதல் (Zero Garbage) என்ற நிலையினை கொண்டு வர உரிய இயந்திரங்களை கொள்முதல் செய்து குப்பைகளை கையாள வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: