நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; இது என் வாழ்க்கையின் பெருமையான தருணங்களில் ஒன்று: பி.வி.சிந்து பேச்சு

டோக்கியோ: ஒலிம்பிக்கில பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை ஹீ பிங் ஜியாயோவை எதிர்த்து ஆடிய சிந்து 21 -13, 21 - 15 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் கைப்பற்றினார். ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பெரும் 2வது பதக்கம் இதுவாகும். புதிய வரலாறு படைத்த சிந்துவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இன்று பி.வி.சிந்து நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய பி.வி.சிந்து; பதக்கம் வென்றபின் கடந்த 2 நாட்களாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பேட்மிண்டன் சங்கம் உள்ளிட்ட பலரும் வரவேற்க வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை ஆதரித்து ஊக்குவித்த பேட்மிண்டன் சங்கம் உட்பட அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். இது என் வாழ்க்கையின் பெருமையான தருணங்களில் ஒன்று என கூறினார்.

Related Stories: