திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி பிரம்மோற்சவம், ஆண்டாள் திருவாடிப்பூரம் உற்சவ வழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை மேதினி பூஜைகள், நகர சோதனை (சேனை முதல்வர் புறப்பாடு) நடைபெற்றது. நேற்று காலை பெருமாள், ஆண்டாள் கருங்கல் மண்டபம் எழுந்தருளல் நடைபெற்றது. தெர்டர்ந்து 10.20 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து பால், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் கொடிமரத்திற்கு விசேஷ அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.