பெரம்பலூர்: பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் ஆயுதப்படை பயிற்சி வளாகம் உள்ளது. இங்கு பயிற்சியில் உள்ள 200 போலீசாருக்கு இதே வளாகத்தில் காவலர் குடியிருப்பும் உள்ளது. இந்நிலையில் 23 வயதான இரண்டாம்நிலை பெண் காவலர் ஒருவர், ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் திருமணமான 29 வயதானவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மாறுதலாகி சென்ற ஆண் காவலர், கடந்த மே மாதம் மீண்டும் பெரம்பலூர் ஆயுதப்படைக்கு மாற்றலாகி வந்தார்.