புதுக்கோட்டை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவரை சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிலை அடுத்த ராஜநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகப்பன்(57). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து முருகப்பனை கைது செய்தனர்.