5 வயது சிறுமிக்கு டார்ச்சர்: முதியவருக்கு சாகும்வரை சிறை

புதுக்கோட்டை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்  முதியவரை சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிலை அடுத்த ராஜநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகப்பன்(57). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து முருகப்பனை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றவாளி முருகப்பனை ஆயுள் உள்ளவரை சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்தியா நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: