வந்தது அந்த ஆசை... பறிபோனது 15 சவரன்: 2 பேர் கைது

ஆவடி: ‘கணவன் வீட்டில் இல்லை வாருங்கள்’’ என்று இளம்பெண் அழைப்பை ஏற்று சென்ற வாலிபர் தனது 15 சவரன் நகைகள், 2 செல்போன்களை பறி கொடுத்தார். சென்னை அடையாறு, சாஸ்திரி நகர், 7வது தெருவில் வசித்தவர் செந்தில்குமார் (39). நியூஸ் பேப்பர் ஏஜென்ட். இவர் கடந்த 5 மாதத்துக்கு முன் எழும்பூரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஆவடி பகுதியை சேர்ந்த பெர்சோனா (23) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். செல்போன் மூலமும் தகவல்களை அவ்வப்போது  தகவல்களை பரிமாறிக்கொண்டு இருந்தனர். கடந்த 28ம் தேதி இளம்பெண் பெர்சோனா செந்தில்குமாரை தொடர்பு கொண்டு, “எனது கணவர் வீட்டில் இல்லை.

நீங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்று கூப்பிட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக செந்தில்குமார் தனது காரை எடுத்துக்கொண்டு அந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளார். செந்தில்குமார் வீட்டுக்குள் சென்றதும் இளம்பெண் உள்பட 4 பேர் இருந்துள்ளனர். அவர்கள் செந்தில்குமாரை சுற்றிவளைத்து மிரட்டியதுடன் அவரது போனில் உள்ள “கூகுள் பே” மூலமாக ரூ.13 ஆயிரத்ைத பறித்துள்ளனர். இதன்பிறகு செந்தில்குமார் அணிந்திருந்த  தங்க சங்கிலிகள், பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் உள்பட 15 சவரன் நகைகள், 2 செல்போன்கள் ஆகியவற்றையும் பறித்துவிட்டு செந்தில்குமார் கண்ணை கட்டி, அவரது காரில் ஏற்றி மதுரவாயல் பைபாஸ் சாலையில் விட்டுவிட்டனர்.

பின்னர் பெண் உள்பட அனைவரும் அங்கிருந்து பைக்குகளில் சென்றுவிட்டனர். இதுபற்றி செந்தில்குமார் கொடுத்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதுசம்பந்தமாக ஆவடி, காந்தி நகர், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த சரவணன் (25), பட்டாபிராம், லெட்சுமி நகர், முல்லை தெருவை சேர்ந்த அஜித்(24) ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான கணவன், மனைவியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: