கரூர்: கரூர் அருகே பேச மறுத்த கள்ளக்காதலியை வெட்டிக்கொலை செய்த 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் சேவாப்பூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள்(55). விவசாய தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி (எ) மணி(70). பழனியம்மாளுக்கும், மணிக்கும் கடந்த 30 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக இருவரும் பேசிக் கொள்வதில்லை. இந்நிலையில் பழனியம்மாளிடம் பேசுவதற்காக அவரது வீட்டுக்கு மணி இன்று அதிகாலை 4 மணியளவில் சென்றார். அப்போது மணியிடம் பழனியம்மாள் பேச மறுத்தார்.