பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, புரசைவாக்கத்தில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. சிறுமியின் பெற்றோர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விசாரணையில், புளியந்தோப்பு திருவிக நகர் 6வது தெருவை சேர்ந்த தினேஷ் குமார் (22) என்பவர் சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.