காஞ்சிபுரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 31ம் தேதி கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார வார துவக்க விழாவை சென்னையில் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆர்த்தி தலைமையில், கொரோனா விழிப்புணர்வு மாபெரும் கையெழுத்து இயக்கம் நடந்தது. அப்போது, பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கபட்டது. பின்னர், டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருக்கும் முறையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் உள்பட பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்.பி. சுதாகர், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.