ஆவடி: சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(39). கடந்த 5 மாதத்துக்கு முன்பு எழும்பூரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றார். அப்போது, ஆவடியை சேர்ந்த பெர்சோனா(23) என்ற இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு, அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 28ம் தேதி செந்தில்குமாரை தொடர்புகொண்ட பெர்சோனா, ‘எனது கணவர் வீட்டில் இல்லை. நீங்கள் வீட்டுக்கு வாருங்கள்’ என்று ஆசைவார்த்தை கூறி அழைத்துள்ளார். செந்தில்குமார் தனது காரில் அங்கு சென்றுள்ளார். பின்னர், அவர் வீட்டுக்குள் சென்றபோது, அங்கு இளம்பெண் உள்பட 4 பேர் செந்தில்குமாரை மிரட்டி, அவரது போனில் உள்ள ‘கூகுள் பே’ மூலம் 13 ஆயிரத்தை பறித்தனர்.