முதல்வரின் எச்சரிக்கை உண்மை 3வது அலையில் இருந்து தப்ப கட்டுப்பாடுகளை கடைபிடிப்போம்: பொதுமக்களுக்கு ராமதாஸ் அறிவுரை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தும், கொரோனா விதிகளை மக்கள் பின்பற்றி நடக்கக் கோரியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் செய்திருக்கும் எச்சரிக்கை உண்மையானது தான். பொதுமக்கள் விழிப்புடனும், கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் நடக்காவிட்டால் தமிழ்நாட்டில் 3வது அலையை தடுக்க முடியாது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டும் தான் பாதிப்புகளைத் தடுக்க முடியும். அதன் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதை நாம் தவிர்க்க வேண்டும்.

Related Stories: