சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் படத்தை சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். கலைஞர் படத்திறப்பு விழாவை ஒட்டி தலைமைச் செயலகம் வளாகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தலைமைச் செயலக நுழைவாயில் முழுவதும் வாழை மரங்கள், தோரணங்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது.