விழுப்புரம்: விழுப்புரம் ஜெயலலிதா பல்கலை. விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் நாளை மறுநாள் விளக்கமளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அடிப்படை வசதி இல்லை என்பதால் மாணவர்கள் நலன் கருதி திருவள்ளுவர் பல்கலை அறிவிப்பு வெளியிட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.