கொடைக்கானல்: கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம், கிடங்கு வசதி அமைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. வேளாண் விற்பனைத் துறை இயக்குனர் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.