சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. டெங்குவை கட்டுப்படுத்தக்கோரும் வழக்கில் தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்து இருந்தார்.