டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக கடந்த 23-ம் தேதி தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.