திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெ.என். சாலையில் புதியதாக அரசு மருத்துவமனைக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு தங்கி கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையனூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ்(35), நேற்று இரவு கனரக வாகனத்தில் சிமென்ட் கலவையை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை கட்டிட பணிக்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் குடிபோதையில் அங்கு வந்த 6 பேர் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர். அவர் வண்டியை நிறுத்தாமல் மருத்துவமனைக்கு பின்புறம் நிறுத்தி விட்டு இரவு பணியில் இருந்த மேற்பார்வையாளர் அஸ்வின்குமாரிடம் சம்பவத்தை கூறியுள்ளார்.