அண்ணாநகர்: சூளைமேடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொரட்டூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் வீட்டில் போலீசார், நேற்று அதிகாலை சோதனையிட்டனர். அங்கு, 15 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து, பிரகாஷின் மனைவி வாணியை (34), கைது செய்தனர். விசாரணையில், பெசன்ட்நகரில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரிக்கு பிரகாஷ் கார் ஓட்டி வருவதும், அவர், விடுமுறையில் வெளியூர் சென்றுள்ளதால், அரசு அவருக்கு அளித்துள்ள காரை, பிரகாஷ் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தி வந்தது தெரிந்தது. அவருக்கு முருகன் (25) என்பவர் துணையாக இருந்து வந்ததும் தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். தலைமறைவான பிரகாஷை தேடி வருகின்றனர்.