சென்னை: தமிழகத்தில் நேற்று 1,990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை, கோவையில் பாதிப்பு குறைந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,156 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 25,06,961 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20,524. அதேசமயம், சென்னையில் நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.